தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை: மேயர் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர சேவையை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போர் கோரிக்கையினை தொடர்ந்து மாலை நேரத்திலும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகமானது செயல்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அந்த சேவையை துவக்கி வைத்தேன் என்றார். மாநகராட்சி உதவி ஆணையர், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ், கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.