தூத்துக்குடியில் 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடியில் 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்!!

தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 18.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.