தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம்  திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறை சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.06.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட  ஆட்சியர்  க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.