கோவில்பட்டியில் புதிதாக மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம்: டிரைவர் காயம்!!
கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் அடைந்தது. டிரைவர் காயமடைந்தார்.

கோவில்பட்டியில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சரிந்து விழுந்து ஆட்டோ சேதம் அடைந்தது. டிரைவர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் 3-வது தெருவில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 21-ந்தேதி மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த பழைய மின்கம்பத்தின் அருகில் புதிய மின்கம்பம் அமைத்தனர். நேற்று புதிய மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க இருந்த நிலையில், காலையில் திடீரென்று அந்த மின்கம்பம் சரிந்து விழுந்தது.
அப்போது மின்கம்பத்தின் அருகில் நின்ற ஆட்டோ சேதமடைந்தது. ஆட்டோ டிரைவர் பேச்சியான் லேசான காயத்துடன் தப்பினார். இப்பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் நகர்நல மையம், ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. காலை மாலை நேரங்களில் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படக்கூடிய இப்பகுதியில் நடப்பட்ட 5 நாட்களில் புதிய மின்கம்பம் சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.