தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!!
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நாம் தமிழர் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி லிட்டில்ராஜ் அளித்துள்ள மனுவில் "மாப்பிளையுரணி பஞ்சாயத்து தாளமுத்துநகர் பிரதான சாலையில் இரண்டு மது கடைகள் இருக்கிறது. இந்த மது கடைகளால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றது இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அரசு விதிப்படி பள்ளி அருகிலும் ஆலய அருகிலும் 100 மீட்டருக்குள் புகையிலை விற்பது மதுகடைகள் இருக்க கூடாது என்கிறது.
ஆனால் தாளமுத்துநகர் பிரதான சாலையில் இருக்கும் இரண்டு மதுகடைகளும் 100 மீட்டருக்குள் ஆர்சி நடுநிலைப்பள்ளி, திரு இருதய மெட்ரிக் பள்ளி, திருக்குறிப்பு தொண்டர் நாயனார் ஆரம்பபள்ளி, நவமணி நர்சரி பள்ளி புனிதமடு ஜெபமாலை மாதா ஆலயம், புனித பிலோமினாள் ஆலயம், பிள்ளையார் கோவில், முத்தாரம்மன் திருக்கோவில், பத்திரகாளியம்மன்திருக்கோவில், சிஎஸ்ஐ கிறிஸ்துவஆலயம் ஆகியவை இருக்கின்றன.
அதிக மக்கள் தொகை கொண்ட தாளமுத்துநகர் மக்களின் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மது கடைகளால் வாகனங்கள் செல்லவும் மக்கள் சுதந்திரமாக நடக்கவும் பெரும் இடையுறாக உள்ளது. எனவே உயிர்பலி மற்றும் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்த இரண்டு மதுக்கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனார்.