செய்துங்கநல்லூரில் அதிர்ச்சி: தகாத உறவு சந்தேகத்தில் அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், தகாத உறவு சந்தேகத்தில் தனது சொந்த அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி மற்றும் அவரது நண்பர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செய்துங்கநல்லூரில் அதிர்ச்சி: தகாத உறவு சந்தேகத்தில் அக்காவை அரிவாளால் வெட்டிக்கொன்ற தம்பி கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடும்ப தகராறு கொலைவெறியாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் தெருவைச் சேர்ந்த ராஜாவின் மகள் சண்முகத்தாய் (எ) சுமித்ரா (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வந்தார். அண்மையில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தார்.

இந்நிலையில், சுமித்ரா சிலருடன் தகாத உறவில் இருப்பதாக அவரது தம்பி முத்துராஜா (27) சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு முத்துராஜா, தனது நண்பர் வசந்த் (26) உடன் மோட்டார் சைக்கிளில் அக்காவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் வாசலில் நண்பர் நின்றபோது, உள்ளே சென்ற முத்துராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல்துறை, உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சில மணி நேரங்களிலேயே இருவரையும் கைது செய்தது. முத்துராஜா குடும்ப மானத்திற்காக செய்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.