அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வின்போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.