விளாத்திகுளம் அருகே பரபரப்பு... ஊரைவிட்டு ஊரணியில் குடியேறிய பொதுமக்கள்

விளாத்திகுளம் அருகே தனியார் காற்றாலை நிறுவனத்தின் பணியை நிறுத்தக்கோரி கிராம பொதுமக்கள் "ஊரைவிட்டு ஊரணியில் குடியேறும்" போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம் அருகே பரபரப்பு... ஊரைவிட்டு ஊரணியில் குடியேறிய பொதுமக்கள்
விளாத்திகுளம் அருகே பரபரப்பு... ஊரைவிட்டு ஊரணியில் குடியேறிய பொதுமக்கள்

விளாத்திகுளம் அருகே தனியார் காற்றாலை நிறுவனத்தின் பணியை நிறுத்தக்கோரி கிராம பொதுமக்கள் "ஊரைவிட்டு ஊரணியில் குடியேறும்" போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமரெட்டையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளின் வழியாக உயர்மின்னழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து  தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள ஊரணி கரையில் அமர்ந்து உணவு சமைத்து "ஊரைவிட்டு ஊரணியில் குடியேறும்" போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் JSW என்ற தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மக்கள் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்படும் உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மின்கம்பங்களை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள ஊரணியில் அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு "ஊரை விட்டு ஊரணியில் குடியேறும்" போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மேலும் JSW நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் மின் கம்பமானது பேருந்து நிறுத்தத்திற்கும் - கோவிலுக்கும் இடையே செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு பாதுகாப்பற்ற முறையிலும் இருப்பதாக கூறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அமைக்கப்படும் மின்கம்பங்களை உடனடியாக அகற்றி மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பணிகள் நடந்தவந்ததால் சாலையோர பைப்லைன்கள் உடைக்கப்பட் தண்ணீர் வெளியேறியது. வேறு வகையிலும் பல்வேறுபாதிப்புக்கள் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகளிடம் மனு அளித்தும், சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாற்று ஏற்பாடுகள் செய்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.