பாஞ்சாலகுறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு!
பாஞ்சாலகுறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி ஆய்வு!

பாஞ்சாலகுறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலகுறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது உற்சவ திருவிழா வருகிற 12.05.2023 மற்றும் 13.05.2023 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று பாஞ்சாலகுறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயம் மற்றும் அதன் வளாக பகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. சிவசுப்பு, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் உடனிருந்தனர்.