இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்..., தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தத்ரூபம்.!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்..., தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தத்ரூபம்.!

ஜம்மு - காஷ்மீர் பெஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் இளம்பகவத் தலைமையில், போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் போர் நடைபெறும் காலத்தில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள் மீது போர் தொடுக்கும் போது தீ பற்றி எறியும். அப்போது, கப்பலில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? போரில் காயப்படும் வீரர்களை எவ்வாறு மீட்பது? அவசர நிலையில் என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை தூத்துக்குடி பாதுகாப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், NCC மாணவ, மாணவிகள் மற்றும் அர்த்தமித்ரா என்ற தன்னார்வ தொண்டர்கள் 250க்கும் மேற்பட்டோர் இணைந்து போர் ஒத்திகையை தத்ரூபமாக செய்து காட்டினர்.