செல்போன் டவர் அமைத்து தருவதாகக் கூறி ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியைச் சோ்ந்த 2 போ் கைது!!

தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவரிடம் செல்போன் டவர் அமைத்து அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவா் ஒருவருக்கு, தங்களது நிலம் செல்போன் டவர் அமைக்க தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம் வருமானம் பெறலாம் என்றும் அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததாம். இதை நம்பிய அவா், அந்த நபரைத் தொடா்புகொண்டு பேசினாராம். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் தான் ஒரு தள பொறியாளா் எனவும், அவருடன் சில நபா்களையும் முதியவருக்கு அறிமுகம் செய்தாராம்.
பின்னா், முதியவரிடம், கைப்பேசி கோபுரம் அமைப்பதற்காக ஆவண கட்டணம், பொருள்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டனராம். இதை நம்பிய முதியவா் பல தவணைகளாக ரூ. 11 லட்சத்து 15 ஆயிரத்து 720-ஐ வங்கி மூலம் அனுப்பியுள்ளாராம். ஆனால், அதன் பின்னா் அந்த நபரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதையறிந்த முதியவா், இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸில் இணையதளம் மூலம் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மேற்கு டெல்லி திலக் நகா், சான்ட் ஹாா்க் பகுதியைச் சோ்ந்த விஜய குமாா் ஷா மகன் நாராயண் குமாா்ஷா (20), மேற்கு தில்லி கயாலா பகுதியைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் குப்தா மகன் தீபக் (20) உள்பட சிலா் சோ்ந்து மேற்படி முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சைபா் குற்றப் பிரிவு போலீசார் நாராயண் குமாா்ஷா, தீபக் ஆகிய இருவரையும் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி கைது செய்து, தூத்துக்குடி அழைத்து வந்து, நீதிமன்றத்தில் நேற்று ஆஜா்படுத்தினா். மேலும், இதுகுறித்து சைபா் குற்றப் பிரிவு போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.