திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்: ரூ.86 ஆயிரம் அபராதம்!

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்: ரூ.86 ஆயிரம் அபராதம்!

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன் ஆகியோா் திருச்செந்தூா் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், வெளியூா் வாகனங்களை அனுமதியின்றி இயக்குதல், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு மொத்தம் ரூ. 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.