தூத்துக்குடியில் பழவியாபாரி டிரைசைக்கிளை தீவைத்து எரித்த வாலிபர் கைது!
தூத்துக்குடியில் டிரைசைக்கிளை தீவைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் டிரைசைக்கிளை தீவைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). டிரை சைக்கிளில் வைத்து பழம் வியாபாரம் செய்து வந்தாராம். இவரது டிரைசைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தாராம். அதன் அருகே அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் விளையாடிய போது சதீஷ் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
இதனை அந்த பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற எலும்பு அருண் (34) என்பவர் கண்டித்தாராம். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் (எ) எலும்பு அருண், சதீசின் டிரைசைக்கிளை தீவைத்து எரித்து விட்டு மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் (எ) எலும்பு அருணை கைது செய்தனர்.