மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் ஆதி (எ) ஆனந்த் பாண்டியர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல்: பறை இசையுடன் இளைஞர், மகளிர் பேரதிரடி ஆதரவு!!

மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை நிறுவனர்  ஆதி (எ) ஆனந்த் பாண்டியர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல்: பறை இசையுடன் இளைஞர், மகளிர் பேரதிரடி ஆதரவு!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆதி (எ) ஆனந்த் பாண்டியர் சுயேச்சை வேட்பாளராக இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வு உற்சாகமும் வித்தியாசமும் கலந்த ஒன்றாக அமைந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் பறை இசையுடன் ஊர்வலமாக வந்து, முழக்கங்களுடன் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த காட்சி ஓட்டப்பிடாரம் பகுதியில் பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி (எ) ஆனந்த் பாண்டியர், மக்கள் நலன், கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சாதாரண மக்களின் குரலாக செயல்படுவதே தனது நோக்கம் என்றும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய மாற்றத்தை உருவாக்க உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வு, சுயேச்சை வேட்பாளரின் வருகையால் தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.