தூத்துக்குடியில் தொடரும் சாதிய பாகுபாடு..? காலை உணவு திட்டத்தை மறுத்த குழந்தைகள்..!
தூத்துக்குடியில் தொடரும் சாதிய பாகுபாடு..? காலை உணவு திட்டத்தை மறுத்த குழந்தைகள்..!

எட்டயபுரம் அருகே காலை உணவு திட்டத்தினை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் - அதிகாரிகள் பேச்சு வார்த்தை - மறுத்துவரும் பெற்றோர்கள், அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு- விரைவில் நவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு காலை உணவு திட்டம் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் 25ந்தேதி தமிழகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதே ஊரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் சமையல் செய்து உணவு கொடுத்துள்ளார். இதற்கு அங்கு பயிலக்கூடிய மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்தனர். தங்கள் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினார். இந்நிலையில் இப்ப பிரச்சனை குறித்து தகவல் கிடைத்ததும்
இன்று குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய் துறை , ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குழந்தைகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று மறுத்து விட்டனர். இரண்டு குழந்தைகள் மட்டும் உணவு அருந்ததிதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி குழந்தைகள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் காலை உணவு திட்ட சமையலர் ஆஙியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். மேலும் காலை உணவு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார்
இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுவையில்ஊரில் உள்ளவர்களுக்கும், காலை உணவு திட்டத்தில் சமையல் செய்பவருக்கும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க மறுத்து வருவதாகவும், குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை.. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
இது குறித்து சமையலர் முனிய செல்வி பேசுகையில் தனது குழந்தையும் இங்கு தான் பயிற்று வருகிறது. எல்லா தகுதியும் இருந்தது பணிக்கு அமர்த்தினர். கடந்த மாதம் 25ந்தேதி முதல் பணியாற்றி வருகிறேன். 11 குழந்தைகளில் 2 பேர் தான் சாப்பிட்டு வருவதாகவும். சாதி பகுபாடு காரணமாக மற்ற குழந்தைகளை சாப்பிட பெற்றோர்கள் விடுவதில்லை, குழந்தைகள் சாப்பிட ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் பெற்றோர்கள் தடுத்து, மிரட்டி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் கேட்டபோது எங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு வேண்டாம் மற்றபடி ஜாதி அடிப்படையில் இதை நாங்கள் பார்க்கவில்லை அவுளதான் என்று கூறினர். பேசுவதற்கும் ,பேட்டி தருவதற்கும் மறுத்து விட்டனர்