உப்பு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் : ஏப்.30 முதல் 2 ஆண்டுகளுக்கு அமல்!

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஏப். 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்தது. இதில், தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற் சங்கங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உப்பு வாருதல் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தினமும் ஊதியத்தை ரூ.600 ஆகவும். உப்பு வாருதல் இல்லாத பிற பணிகளுக்கு வழங்கப்படும் தினமும் ஊதியத்தை ரூ.590 ஆகவும் உயர்த்தி வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். மேலும் இந்த ஒப்பந்தம் 30.4.2024 முதல் இரண்டு ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு உப்புத் தொழிலாளர் சங்கம், சார்பில் தலைவர் பொன்ராஜ், செயலாளர் கே. சங்கரன், பொருளாளர் மாணவலன் ஏ.ஐ.டி.யு.சி.ஜில்லா உப்பு தொழிலாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி., தமிழ்நாடு தேசிய உப்பு தொழிலாளர் சம்மேளனம், வேப்பலோடை வட்டார உப்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,மாவட்ட அண்ணா உப்பு தொழிலாளர் சங்கம், தூத்துக்குடி வட்டார உப்பு வார் முதல் தொழிலாளர் சங்கம், இந்திய தேசிய உப்புத் தொழிலாளர்கள் ஐக்கிய சங்கம் ஆகிய 7 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.