விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆதரிக்க மாட்டேன்: சீமான் பேட்டி!

"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆனால் ஆதரிக்க மாட்டேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆதரிக்க மாட்டேன்: சீமான் பேட்டி!

"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆனால் ஆதரிக்க மாட்டேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் அவர்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளன்று மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய்யின் அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். 

தமிழகத்தில் அரசியல் மாற்று என்பதில், இந்தக் கட்சியை விட்டால் அந்தக் கட்சி, அந்தக் கட்சியை விட்டால் இந்தக் கட்சியென்று, இந்த நிலமும், மண்ணும் ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டது. விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை விஜய் அரசியல் கட்சி தொடங்கினால், அவரை ஆதரிக்க மாட்டேன். விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் ஒரு தனித்த பேரியக்கமாக வரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று கூறினார்.