பெண்ணிடம் நிலத்தைக் கேட்டு மிரட்டல்: ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏவின் சகோதரர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த பெண்ணின் நிலத்தைக் கேட்டு மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏவின் சகோதரரை முத்தையாபுரம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரா் அயிரவன்பட்டி முருகேசன். தொழிலதிபரான இவா் முன்னாள் அதிமுக பிரமுகா் ஆவாா். இவா், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றாலைகளுக்கு இடம் எடுத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.
இந்நிலையில் எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி என்பவரின் சுமாா் 4.5 ஏக்கா் நிலம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ளதாம். இந்நிலையில். மாடத்தி மற்றும் அவரது கணவா் மாரிமுத்து முத்தையாபுரம் மதிகெட்டான் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது, முருகேசன் காரில் வந்து அவா்கள் இருவரையும் வழிமறித்து மேற்கூறிய நிலத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீஸாா் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.