தூத்துக்குடியில் பரிதாபம்... சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு..!
தூத்துக்குடியில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி, பலத்த தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடியில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றி, பலத்த தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார் புரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (42), கடந்த மாதம் 21ஆம் தேதி தனது வீட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சேலையில் தீப்பிடித்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.