கோவில்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் பைக்கில் எடுத்து சென்ற ரூ.1லட்சம் பறிமுதல் !!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் முறையான ஆவணங்களின்றி பைக்கில் கொண்டு வந்த ரூ. 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி பேரவை தொகுதியில் கூட்டுறவுத்துறை தணிக்கையாளரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான கல்யாணசுந்தரம் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகோபால், தலைமை காவலர் முத்துக்குமார், முதல் நிலை காவலர் முத்துப்பாண்டியன், பெண் தலைமை காவலர் அமிர்தஜோதி ஆகியோர் கயத்தாறு அன்னை தெரசா பள்ளியையடுத்த மேம்பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே சென்ற பைக்கை நிறுத்தி ஆய்வு செய்ததில், அதில் ரூ.1 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் இருந்து அவருடைய ஊதியத்தை வாங்கி வருவதாக கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததையடுத்து அவரிடம் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.