திருச்செந்தூர் கோவில் அருகே 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது!!

திருச்செந்தூர் கோவில் அருகே 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் கோவில் அருகே 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது!!

திருச்செந்தூர் கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதுமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் திருச்செந்தூர் கடல் இன்று காலையில் இருந்தே சுமார் 100அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. 

இதனால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் பக்தர்கள் வழக்கமாக நீராடும் பகுதியில் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர். மேலும் சிலர் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர்.