தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு!!
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை, தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொன்பாண்டி பிரபு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 பேருடன் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு கடந்த வாரம் சென்று கொண்டிருந்தாா். கேம்ப் தட்டப்பாறை அரசினா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளி அருகே பொன்பாண்டி பிரபு மீது, செட்டியூரணியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சொரிமுத்து (52) என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதாம்.
இதில், பொன்பாண்டி பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சொரிமுத்துவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் உயிரிழந்தாா். தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.