சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து 2 வது நாளாக உறவினர்கள் போராட்டம்!
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து 2 வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

குளத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ அரசடி அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 42). இவர் உப்பளத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது குளத்தூர் அருகே உள்ள பணையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மே 26 ஆம் தேதி மதியம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரை பற்றிய தகவலை அவரது வீட்டுக்கு தெரிவிக்காமல் இறந்த பிறகு தெரிவித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் மெத்தன போக்கின் காரணமாக அவர் உயிரிழந்தார் என கூறி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தையும், காவல் துறையினரையும் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி யினர் இறந்தவர்களின் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.