தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகள் பிரச்சினைக்கு முதல்வர் ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்வு: சிபி எம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி..!

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகள் பிரச்சினைக்கு முதல்வர் ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்வு: சிபி எம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி..!

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இதனால் திமுக வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது :

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திருநெல்வேலியில் நடைபெறும் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நிலையில் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக ஓய்வூதியம் தொடர்பாக சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். 

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக ஆட்சியில் தமிழகத்திலும் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிஜேபி ஆட்சியில் இந்தியா முழுவதும் ஓய்வுதம் என்பது நிறுத்தம் செய்யப்பட்டது இது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது. 23 ஆண்டு காலம் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது போராடிய ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி அடக்குமுறை அவர்கள் நிர்வாக ரீதியான நடவடிக்கை வழக்குகள் தொடுத்து அவர்கள் நிர்வாகத்தில் ரீதியான நடவடிக்கைகளை ஏவி அடக்கு முறையை நிகழ்த்தியது எடப்பாடி அரசு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

திமுக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர் அமைப்புகள் கடந்த நான்காண்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த ஆண்டு கண்டன் சிங் பீடி ஐஏஎஸ் தலைமையில் ஓய்வூதியம் வழங்குவது சம்பந்தமாக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு குழு அமைத்து அதன் அடிப்படையிலும், ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்துவதாக அறிவித்த நிலையில். இன்றைய தினம் 

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது இதில் 10% ஊழியர்களின் உடைய பங்களிப்பும் மீதி தேவைப்படும் நிதியினை தமிழ்நாடு அரசு தன்னுடைய நிதியில் இருந்து ஒதுக்கிக் கொள்ளும் மேலும் திட்டமானது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர்.  

அதேபோன்று அங்கான்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் சாலை பணியாளர்களுக்குண்டான அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படவில்லை .. சாலை பணியாளர்களுக்கு 41 மாதம் காலம் ஜெயலலிதா ஆட்சியில் நீக்கப்பட்ட பின்பு திமுக ஆட்சியில் இணைக்கப்பட்டது. அவருக்கு உண்டான நிதி அறிவிப்பு ஒன்றும் இதில் இல்லை . பலவேறு துறைகளில் உள்ள ஊதிய முரண்பாடு களையபட வேண்டும், இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். 

கடுமையான நிதிச் சுமைக்கு மத்தியில் தமிழக அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நிதியை வழங்குவதில்லை அதே போல் பல்வேறு திட்டங்களுக்கான பங்கேற்று நிதியினையும் வழங்கப்போவதில்லை பலவிதமான பாரபட்சமான நிதி ஒதுக்கீடை ஒன்றிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நிலையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்ட உணர்வையும் அவர்களின் அவசியத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசாங்கம் இத்தகைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது மிகவும் பாராட்டத்திற்குரிய ஒன்றாகும்.  

மேலும் மீதமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி அனைவருக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றும் அரசாக திமுக அரசாங்கம் செயல்பட வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உண்டான ஓய்வூதியத்தை அதிகரிக்க முன் வர வேண்டும். மேலும் இந்த அறிவிப்பானது திமுக அரசின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மிகவும் வலுவானு கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி தான். அதிமுக, பிஜேபி கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் அழைத்தும் யாரும் போகவில்லை.. மேலும், தமிழக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற முடியாதது தான். ஆனால் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது மகிழ்ச்சி. 

தமிழ்நாடு மீது ஒன்பது லட்சம் கோடி கடன் உள்ளது என எதிர்கட்சிகள் கூறுவதற்கு. ஒன்பது லட்சம் கடன் திமுக வாங்கியது இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஏறத்தாழ 5 லட்சம் கோடி கடன், திமுக ஆட்சியில் நான்கரை லட்சம் கோடி தான் கடன் வாங்கி இருக்கிறார்கள்.. இந்த கடனானது பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் வாங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர்கள் அதனை விரிவாக தெரிவித்துள்ளனர். அனைத்து மாநில அரசுகள் கடன் வாங்குவது இயல்புதான். மத்திய அரசும் மிக அதிகமான கடன் பெற்றுள்ளது. திமுக மட்டும்தான் கடன் வாங்கியது போன்று கூறுவது பொருத்தமாக இருக்காது..

இந்தியாவில் தமிழகம் வளர்ச்சி மாநிலம் என்று மத்திய அரசு கூறியிருப்பது உண்மைதான் மறுப்பதற்கு இல்லை என்றார்.

இந்த பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ், தூத்துக்குடி மாநகர செயலாளர் எம். எஸ்.முத்து, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் கே.சங்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.