விளாத்திகுளம் அருகே விசாரணைக்கு சென்றவரை தாக்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!

விளாத்திகுளம் அருகே விசாரணைக்கு சென்றவரை தாக்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!

விளாத்திகுளம் அருகே விசாரணைக்கு சென்றவரை தாக்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!

சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவரை தாக்கிய காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம்.சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகு முருகேசன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக புகார் மனு விசாரணைக்காக சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் 08-06-2023 சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது. விசாரணைக்காக அழகு முருகேசன் உடன் அழகு முருகனின் சகோதரர் ராஜகனி என்பவரும் விசாரணைக்கு சென்றுள்ளார். 

விசாரணையின் போது காவல் உதவி ஆய்வாளர் சுந்தரத்திற்கும், ராஜகனிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ராஜகனியை தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜகனி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உதவி ஆய்வாளர் சுந்தரத்தை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உததரவிட்டுள்ளார்.