பால் பண்ணையின் வைக்கோல் படப்பு எரிந்து நாசம்- போலீசார் விசாரணை!
ஆறுமுகனேரி ஆதவா தொண்டு நிறுவன பால்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது.

ஆறுமுகனேரி ஆதவா தொண்டு நிறுவன பால்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் ரோட்டில் ஆதவா தொண்டு நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான பால்பண்ணை உள்ளது. பால் பண்ணையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்காக ஆயிரக்கணக்கான கட்டு வைக்கோல் வாங்கி இருப்பு வைத்துள்ளனா். இந்நிலையில் நேற்று மாலை வைக்கோல் வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து பால்பண்ணையில் உள்ள பணியாளா்கள் சென்று பாா்த்த போது தீ பற்றி எரியத் தொடங்கியது.
மாலையில் காற்று அதிகமாக வீசிக் கொண்டிருந்ததால் வைக்கோல் படப்புகள்முழுமையும் பற்றி எரியத் தொடங்கின. இதில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தன. மேலும், வளா்ப்பு பிராணிகளும் தீயில் கருகி இறந்துள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த சாகுபுரம் டி.சி.டபிள்யூ., திருச்செந்தூா் தீயணைப்பு மீட்டுப் படையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு வரை தீ கட்டுக்குள் வராததால் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க போராடி கடைசியில் தீயை அனைத்தனர்.