தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக விஷு மகாஜன் பொறுப்பேற்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.